பூவுக்குள் பூகம்பம்

"பூவுக்குள் பூகம்பம்" என
வாசித்த பொது என்ன
உவமை இது என்று
எள்ளி நகையாடியிருகிறேன்

ஆனால்

அந்த வரிகளுக்கு
உயிரூட்டியவள் நீ ...

உன் பார்வையை நேருக்கு நேராய்
சிந்தித்த போதுதான்
சித்தரிக்க பட்டிருக்க வேண்டும்
இந்த வரிகள்...

அல்லது

ஏதோ ஒரு தமிழ் புலவன்
உன்னை கண்டு
துறவறத்தை துறவுபூண்டபோது
அவன் எழுதிய வரிகளாயிருக்கலாம்
இந்த வரிகள்...!


No comments:

Post a Comment