காத்திருக்கிறேன்

நம் இமைகள்
கொண்ட உறவால்
உண்டான ஜீவன்
இந்த காதல்..

இதழ் பிரித்து
வார்த்தை சேர்த்து
சொல் பெண்ணே!

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?!

அல்லது

இனி இதயமே சுமையாகும் நாளா?!
காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...

No comments:

Post a Comment