என் காத‌லும் உன் காத‌லும்

செக்க‌செவேலென‌ நிற‌ம்
சென்னைக்கு ப‌க்க‌த்தில்
ஆறு ஏக்க‌ர் நில‌ம்
நிச்ச‌ய‌த்துக்கே இருப‌தாயிர‌ம்
ரூபாயில் ப‌ட்டுபுட‌வை என‌


நான் ந‌க‌ர்ந்துவிட்டாதாகஎண்ணி
உன்தோழியிட‌ம்நீ பித‌ற்றிய‌
பெருமைக‌ள்சொல்லிசென்ற‌து..

வ‌ர‌வ‌ழைத்த‌ க‌ண்ணீரோடு
வ‌ற்புறுத்தினார்க‌ள்
ம‌றுக்க‌முடியா சூழ்நிலை என‌
ம‌ன‌ங்கூசாம‌ல் நீ சொன்ன பொய்களை!!!


இப்போதாவ‌து சொல்வாயா
உன்னுட‌னான‌ என் காத‌லும்
ப‌ண‌ம்மீதான‌ உன் காத‌லும்
உண்மைதானென்று..

No comments:

Post a Comment