திரும‌ண‌ சேதி சொல்லி

நான் எதையாவ‌து

சொல்ல‌ சின்ன‌குழ‌ந்தையாய்
சினுங்கிகொண்டு
பேச‌மாட்டேனென‌
சொல்லிவிட்டு

அடுத்த‌ ஐந்துநிமிட‌ங்க‌ள்
ந‌ம‌க்குள் அழைப்புக‌ள்
அர‌ங்கேறுமே
அப்ப‌டிதான‌டி
இந்த‌முறையும் செய்வாய்
என‌ இருந்தேன்.

ஆறுமாத‌ம் க‌ழித்த‌ உன்
அழைப்பில் வ‌லியோடே
நான் க‌ண்ட‌ சுக‌த்தை
அப்போதே
அடித்துநொறுக்கினாயே உன்
திரும‌ண‌சேதி சொல்லி

No comments:

Post a Comment