அர‌ங்கேறிய‌ க‌ண‌ங்க‌ள்






கனவில் கைகோர்த்த‌
கடற்கரைகள் இன்றுநம்
கால்தடங்களை பதிக்கிறது..

எந்தலை வலிக்காக நீயும்
உன் காய்ச்சலுக்காக நானும்
வலிகண்ட அழுகைகளும்

தோல்விக‌ளுக்கான
தேற்றுத‌ல்க‌ளும்
வெற்றிக‌ளுக‌ளுக்கான‌
வாழ்த்துக‌ளும்

ப‌றிமாற‌லாய்
அர‌ங்கேறிய‌ க‌ண‌ங்க‌ள்
என் வாழ்வின்
விமோட்ச‌ன‌ங்க‌ளென்று
இருவ‌ரும் சொல்லிகொண்டோமே!!

No comments:

Post a Comment